புதன், மார்ச் 17, 2010

சில நேரங்களில் சில மனிதர்கள்



 நியூயார்க் நகரத்தின் சுரங்கபாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஞாயிற்றுகிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார்.ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில ஒரு அமைதியான சூழ்நிலை உருவாகியது. சிலர் கண்களை முடியும்,பலர் பத்திரிகைகளை படித்த படியும் அமர்திருன்தனர்.அப்போது அங்கே ஒருவர் தன் இரு குழந்தைகளுடன் வந்து அந்த பிரபல எழுத்தாளர் அருகே வந்து கண்களை மூடி அமர்ந்தார்.குழந்தைகள் இருவரும் ஆறு வயதை தண்டாதவர்கள்,அவர்கள் விளையாட ஆரமித்தனர்.

சிறிது நேரத்தில் அங்கு இருந்த அமைதி காணாமல் போயிற்று.
குழந்தைகள் சத்தம் போட்டு விளையாடிய் கொண்டனர்,பிறகு சண்டை போட்டு கொண்டு ஒருவர் மீது ஒருவர் பொருட்களை வீசி கொள்ள அரமித்தனர்,அவர்கள் தந்தையோ அவர்களை கண்டிபதாக தெரியவில்லை,அவரோ கண்களை திறபதாக தெரியவில்லை.

அங்கு இருந்த அனைவரும் அவரை எரிச்சலாக பார்ப்பதை அவர் உணரவில்லை,அருகில் இருந்த எழுத்தாளர்ரோ பொறுமை பற்றி நெறய எழுதி குவித்தவர் பொருத்து,.பொருத்து பார்த்த அவர்ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன் அருகே அமர்ந்து இருந்த குழந்தைகளின் தந்தையிடம் சொன்னார் உங்கள் குழந்தைகள் மற்றவர்களை தொந்தரவு செய்கிறார்கள் அவர்களை கட்டுபடுதுன்கலேன் என்றார்.

அந்த நபர் மெல்ல கண்களை திறந்து ஆமாம் ஏதாவது செய்ய வேண்டும்,ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் அவர்கள் தாய் இறந்துவிட்டாள், ஆஸ்பித்திரியில் அவளது உடலை தர இன்னும் ஒரு மணி நேரமாகும் அதனால் தான் இங்கு வந்தேன் இதை எப்படி அவர்களிடம் சொல்லுவது என்று எண்ணி கொண்டு இருக்கிறேன் மன்னித்து விடுங்கள் என்றார்.

அந்த எழுத்தாளர் அதுவரை அந்த நபர் மீதும்,அவருடைய குழந்தைகள் மீதும் கொண்ட கோபம் மறைந்து அவர்கள் மேல் பரிவும்,பச்சோதாபமும் பிறந்தது,ஏதவாது உதவி வேணுமா என்றும் அவரிடம் கேட்டார்.

அந்த எழுத்தாளர் "செயல் திறன் மிக்க மனிதர்களின் ஏழு பழக்கங்கள்" என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய ஸ்டீபென் ஆர்.கோவே.

இந்த நிகழ்சியில் அந்த சிறுவர்கள் செயல் மாறவில்லை,அங்கே மீண்டும் அமைதி திரும்பவில்லை.ஆனால் அந்த குழந்தைகளும்,அந்த தகப்பனும் இருக்கும் சூழ்நிலை தெரிந்த உடன் அவர் மனநிலை மாறிவிட்டது.

நமக்கு தவறாக தோன்றும் பல செயல்களுக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன.சில நம்மால் ஏற்று கொள்ள கூடியதாகவும்,சில ஏற்று கொள்ள முடியாதாகவும் இருக்கலாம்,ஆனால் அந்த காரண காரியம்அறியும் போது புரிந்து கொள்ளுதல் சாத்தியமாகிறது,
மன்னித்தல் எளிதாகிறது.

எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்வதற்கு
மனிதன் எந்திரமல்ல,
எந்திரம் கூட சில நேரங்களில் பழுதாகும் போது,
சில நேரங்களில் சில மனிதர்கள் நாம் எதிர்பார்பதற்கு மாறாக நடந்து கொள்வது அதிசியமல்ல. அந்த நேரத்தில் ஏதவாது காரணம் இருக்கும் என்று நாம் கோபபடாமல் சிந்தனை செய்தால் அதை பெரிதுபடுத்தாமல் நகர்கிற பக்குவம் நமக்கு வந்து விடும்


(இது என் நண்பர் எனக்கு மின்அஞ்சலில்
எனக்கு அனுப்பியதை மாற்றி எழுதி இருக்கிறேன்)

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

உண்மைத்ஹன் எல்லா விசயங்களுக்கும் ஒரு காரணம் இருக்கும்

S Maharajan சொன்னது…

கருத்துக்கு நன்றி சிவசங்கர்

எல் கே சொன்னது…

arumai

S Maharajan சொன்னது…

கருத்துக்கு நன்றி LK

R.Gopi சொன்னது…

மிகவும் உருக வைத்த நிகழ்வு இது...

ரயிலில் நடப்பதாக படித்திருக்கிறேன்...

மீண்டும் படிக்கும் போதும், மனசு கனத்து போனது..

கருத்துரையிடுக