செவ்வாய், மார்ச் 16, 2010

நீதிமன்றத்தில் நித்தியானந்தா (ஒரு கற்பனை)


நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..


கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..


நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..


குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்..


ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை. அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....

உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக.... நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலத்திலே பொது நலமும் கலந்து இருக்குறது, என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..


நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..


கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..


இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???


தமிழ்நாட்டில் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,


ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...


என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலே உதைக்க தோன்றும் பெயர். ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது நான் மட்டும் நினைத்திருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.


ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம், நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...

மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தார்கள்.... ஓடினேன்


நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்......


ஓடினேன் ஓடினேன்.... கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்


ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...


எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.


என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை யூ டியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.



செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பி கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??


இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.

6 கருத்துகள்:

திவ்யாஹரி சொன்னது…

ஹா.ஹா..ஹா.. முடியல.. நேரமின்மை காரணமாக பின்னூட்டம் இட முடியவில்லை..

S Maharajan சொன்னது…

திவ்யாஹரி சொன்னது…
//ஹா.ஹா..ஹா.. முடியல.. நேரமின்மை காரணமாக பின்னூட்டம் இட முடியவில்லை..//


தவறாமல் வருவதற்கே நன்றி தோழி!

nadpudan kathal சொன்னது…

அசல் இதுதானே

http://nbavan7.blogspot.com/2010/03/blog-post_07.html

கன்கொன் || Kangon சொன்னது…

இன்னொருவரின் பதிவை எடுத்து உங்கள் பதிவில் முழுமையாக இடுவது எந்தளவிற்குச் சரியானது என உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்...

இன்னொருவரின் உழைப்பை தயவுசெய்து மதியுங்கள்...

http://nbavan7.blogspot.com/2010/03/blog-post_07.html

Subankan சொன்னது…

நீதிமன்றத்தில் நித்தியானந்தா (ஒரு காப்பி - பேஸ்ட் பதிவு)

தலைப்பை இப்படி மாற்றிவைக்கவும்.

ஒரிஜினல் இதல்லவா?

http://nbavan7.blogspot.com/2010/03/blog-post_07.html

S Maharajan சொன்னது…

Subankan,கன்கொன் || Kangon,அனுதினன்
நண்பர்களே அது அடுத்தவர் பதிவு என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும்.இது என் நண்பர் எனக்கு email அனுப்பியது
பொதுவாக இது மாதிரி நான் email பெரும் போது அதை குறிப்பிட்டு விடுவேன்,இந்த முறை அது தவறிவிட்டது.இனி மேல் இது மாதிரி வராமல் பார்த்து கொள்ளகிறேன்.தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி.

கருத்துரையிடுக