செவ்வாய், ஜூலை 26, 2011

எனக்கு பிடித்த கமல் படங்கள்

கமல்ஹாசனின் திரை பயணத்தில்
எனக்கு பிடித்த எட்டு படங்கள்-1

மூன்று தேசிய விருதுகளைப் (மூன்றாம் பிறை (1982),நாயகன் (1987) மற்றும் இந்தியன்(1996) பெற்ற நடிகர்.சிவாஜிக்கு பிறகு என்று இல்லாமல் இருக்கும் போதே அவரை விட அற்புதமான நடிப்பை வெளிபடுத்திய நடிகன்.ஒரு ரஜினி ரசிகனாய் நான் ரசித்த என்றும் ரசித்து கொண்டு இருக்கின்ற நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்களை பற்றி தான் இந்த பதிவு,அவர் இது வரை 200 படங்களுக்கு மேல் நடித்து இருந்தாலும் எனக்கு என்னோவோ அவரின் திரைபயணத்தில் இந்த எட்டு படங்கள் மட்டுமே பிடிகின்றது.இந்த எட்டு படத்திலும்,எட்டுவித்தியாசமான நடிப்பால் மிரட்டுவார் ஆனால்
ஏதோ இவர் மட்டுமே தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார் என்ற பல அறிவு ஜீவிகளின் கருத்து காமடியே.கமல்ஹாசனை பொறுத்த வரையில் பல ஹாலிவுட் படங்களை அப்படியே காபி
செய்துதான் தன் படத்தில்பயன்படுத்துகிறார் என்ற குற்றசாட்டு உண்டு பல படங்களில் அது உண்மையும் கூட,ஆனால் அவர் அந்த படங்களை அப்படியே காப்பி செய்யாமல் நம் மக்களுக்கும் ஏற்றவாறு சற்று மாற்றுவது உண்டு.வேப்பம் பூ கசந்தாலும் அதனில் உள்ள தேன் இனிப்பது போல இவரின் திறமை நம்மை மெய் மறக்க செய்வது யாராலும் மறுக்க முடியாத உண்மை தான். இனி எனக்கு பிடித்த அந்த அதியிசங்கள்....

நாயகன்


இந்த படத்தை இது வரை நான் எத்தனை முறை பார்த்து இருப்பேன் என்றே தெரியாது, அந்த அளவுக்கு எனக்கு பிடித்த படம். கமல்ஹாசனின் திரை பயணத்தை இரு வகையாக பிரிக்கலாம் என்றே சொல்லுவேன்.நாயகனுக்கு முன்பு, பின்பு என்று .நாயகனுக்கு பின்புதான் இவர் தன் கலை பயணத்தையே மாற்றி அமைத்தார்.இந்த படத்தில் இவர் ஏற்ற வேலு நாயகர் என்ற பாத்திரமாகவே வாழ்ந்து இருப்பர்,இதில் சிறுவன் முதல் அறுபது வயது கிழவன் வரை ஒவ்வரு கால கட்டத்தில்லும் கமல் நடிப்பு இன்று வரை எந்த நடிகரும் செய்ய இயலாத ஒன்று .பாலகுமாரனின் வசனத்தில், மணிரத்னம் திரைக்கதை அமைத்து எடுத்த ஒரு வெள்ளி விழா காவியம்.இந்த படத்தைப் பார்த்த தலைவர் ரஜினிகாந்த் உடனடியாக கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ள சிறப்பம்சம், "நீ நடிகனின் நடிகன்".

அன்பே சிவம்.

தொழிலாளர்களுக்காகப் போராடும் நல்லசிவம் என்ற கதாபாத்திரத்தில் கமல் நடித்து இருப்பர்.கம்ப்யூனிசத்தின் உண்மையான கருத்துக்களை சராசரி மனிதருக்கும் சரியாக புரிய வைத்த படம் இது. பொதுவாக கமல் படத்தில் உள்ள குறை என்னவென்றால் அவர் மட்டுமே நடித்து,அவருக்கே புரிந்த சில பகுத்தறிவான விசயங்களை பேசி நம்மை கொள்வார்.ஆனால் இந்த படம் சற்று மாறுபட்டது இதில் ஏற்ற எல்லா கதை பாத்திரமும் நன்றாக நடித்து இருப்பார்கள்.

மகாநதி

மகன்,மகளுடன் சந்தோஷ வாழ்க்கை  வாழும் கிருஷ்ணாவாக
கமல்.அதித ஆசையால் சென்னை வந்து அவர் வாழ்க்கை
சீரழியும் கதைதான் மகாநதி.
இந்த படத்தில் எந்தகாட்சியை குறைசொல்லுவது?சொல்லவே இயலாத ஒன்று. விபசாரம் செய்பவர்கள் எல்லாம் அந்த தொழிலைவிரும்பி செய்யவில்லை என்றும் யாரோ ஒருவரால் தான் அங்கே தள்ளப்பட்டு விடுகின்றனர் என்ற உண்மையையும் உணர்த்திய படம்.ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை எல்லாம் ஒரு கெட்டவனுக்கு கிடைச்சிடுதே ஏன்?என்றவசனம்தான்படத்தின் மைய கரு என்றே சொல்லுவேன் நான்.தான் பெரிய மனுஷியான செய்தி சொல்லி சிறையிலிருக்கும் கமலிடம்"மகள் (ஷோபனா) காலில் விழும் காட்சிலும் , அதே மகளை விபசார விடுதியில் இருந்து மீட்டு வந்த பிறகு, இரவில் அந்த பெண் உளறும் வசனத்தை கேட்டு அழும் கமலுடன் சேர்ந்து நானும்
அழுத படம்.

ஆபூர்வ சகோதர்கள்
தன் தந்தையை கொன்றவர்களை மகன் பழிவாங்கும் சாதாரண கதை தான்.கதைகாக இவர் மேற்கொண்ட சிரத்தை என்வென்று சொல்லுவது தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத முயற்சி ஒன்றை இந்த படத்தில் செய்து இருப்பார்,அது குள்ள வேடம்,திரைகதையின் வேகமும் இசைஞாநியின் பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலம்

என்றும் அன்புடன






















புதன், ஜூலை 20, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


நீ மட்டும் எனக்கு கிடைத்து இருக்காவிட்டால்
வாழ்கை என்னவென்று அறியாமலேயே
என் ஆயுள் முடிந்து இருக்கும்....

பல முறை எரிந்து விழுந்து இருக்கின்றேன் உன் மேல்
ஒரு முறை கூட கோப பார்வை பார்த்தது இல்லை நீ.....

ஆழம் விழுதுகள் போல ஆயிரம் உறவுகள் இருந்தும்
என் வேரென நீ இருப்பதால் தான் நான் இன்னும்
வீழ்ந்து விடாமல் இருக்கின்றேன்....

இப்பிறப்பில் ஈர்ப்பில்லை
அடுத்த பிறவியில் ஆர்வமில்லை
அப்படியும் பிறந்திட்டால்
அமுதாவென இனிக்கும் தமிழ் மொழியில்
எனக்கென நீ இயற்றும் கவிதைகளுக்கு
அரசனாகி உன் ஆளுமைக்கு அடிமையாவேன்....

இன்று பிறந்தநாள் (20-07-11) காணும் அன்பு மனைவிக்கு...
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..........

 அன்புடன்.................

செவ்வாய், ஜூலை 12, 2011

தலைவா வருக! வருக!

.வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்ந்து பழகிய வள்ளலே வருக

.இறைவன் அருளால் நோயை வென்று தாயகம்
திரும்பும் அன்புதலைவா வருக வருக..

.தன்னடக்கத்தின் தலைமகனே வருக வருக..

.உடல் நலம் குன்றிப் போய் நா தழு தழுத்து பேசும் வேளையிலும் கூட நான் காசு வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறேன் என்னை ஏன் இவ்வளவு சீராட்டுகிறீர்கள் என்று மனசாட்சிப்படி பேசிய மனித தெய்வமே வருக வருக.


இந்திய சினிமாவின் முடிசூடா மன்னனாகத் திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. இந்தியாவைத் தாண்டி உலகம் எங்கும் அவருக்கு ரசிகர்கள் பல கோடி. ஆசிய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அவர்தான் வரும் புதன்கிழமை இரவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். இரு மாதங்களுக்கு முன் ராணா படத்தின் துவக்க விழாவன்றுதான் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மூச்சுத் திணறல், செரிமானக் கோளாறு என்று ஆரம்பித்தது பிரச்சனை. அவருக்கு
சிறுநீரகக் கோளாறும், நுரையீரலில் நீர்க்கோர்ப்பும் இருப்பது தெரிய வந்தது. நுரையீரலில் இருந்த நீரை வெளியேற்றினர்.
சென்னையில் மட்டும் தொடர்ந்து 5 முறை டயாலிஸிஸ் செய்யப்பட்ட பிறகு, அவர் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பினார். ஆனாலும், அவரது சிறுநீரகங்கள் இயங்கவில்லை.எனவே சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு படிப்படியாக அவரது உடல்நிலை சீரடையத் தொடங்கியது.சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி பூரண நலமடைந்தார், கடந்த ஜூன் 14ம் தேதியே அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். ஆனாலும் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணிக்க, சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பில் வாடகை வீட்டில் ஒரு மாத காலம் தங்கி மருத்துவ ஆலோசனை பெற்றார். பூரண ஓய்வெடுத்து வந்தார்

சில தினங்களுக்கு முன் அவரை சோதித்த மருத்துவர்கள், இனி அவர் சென்னை திரும்பலாம். படங்களில் முன்புபோல நடிக்கலாம் என்று கூறினர்.இதனை தொடர்ந்து அவர் நாளை சென்னை வருகிறார்.....


என்றும் அன்புடன்