திங்கள், மார்ச் 15, 2010

ஒரு வழியா.......... வாங்கிவிட்டேன்!

அப்பாட நானும் ஒரு வழியா வாங்கிவிட்டேன்.இங்கே(துபாய்) வந்த முதல் நாள் முதல் இது என் கனவு எப்படியாது வாங்கிவிடவேண்டும் என்று, வந்த உடனேயும் வாங்க முடியாது ஏன்ன? என்னடா இப்போ தான் வந்தான்,அதுகுள்ளே வாங்கிட்டன்,இவனுக்கெல்லாம் குடும்ப பொருப்பே கிடையாது அப்படி பழி வந்து விடக்கூடாது,அதன்னாலே முதல் வருஷம் என்னோட இந்த ஆசையை கொஞ்சம் தள்ளி வைத்தேன், சரி வருகிற வருஷம்(2008)எப்படியாவது வாங்கி விடலாம்,எப்படியும் போனஸ் கிடைக்கும் அதுல வங்கி விடலாம் என்ற என் கனவுல மண்ணு, உலக பொருளாதார நெருக்கடி! அதனால ஆபீஸ்ல நோ போனஸ், இனி மேல் இங்கே யாரும் வேலை பார்க்க முடியாது அப்படின்னு ஒரே பேச்சு என்னடா செய்ய நம்ம ஆசை அதை வாங்காமலே ஊருக்கு போய்விடுவோமோ என்றெல்லாம் ஒரே பயம்.சரி கொஞ்சம் சேர்த்து வைத்த பணத்தில் இருந்து வாங்கலாம் அப்படின்னு நினைக்கும் போது வீட்டுல இருந்து போன் எப்பா, நல்ல வரன் வந்து இருக்குடா தங்கச்சிக்கு அதனாலே நீ ஊருக்கு (2009) வரும் போது நகை வாங்கிட்டு வந்துடு,அப்படின்னு அப்பா,அம்மா கிட்ட இருந்து போன், சரி தங்கச்சி கல்யாணம் நல்ல படியா முடியட்டும் அப்புறம் வாங்கி கொள்ளலாம்.அப்படினு தோனுச்சி!இதுல வேற வாரம் தோறும் பீர்,டூர் அப்படின்னு செலவு செய்த கிரெடிட் கார்டு பில் கழுத்த பிடிக்க நெலமை ரொம்ப மோசம் ஆகிவிட்டது.அத்தான்வந்து கிரடிட் கார்டு பில் எல்லாம் செட்டில் செய்ததும் கொஞ்சம் நிம்மதி,ஆனா மாதம்தோறும் எனக்கு அந்த பணத்தை செட்டில் செய்ய வேண்டும் அப்படின்னு ஒரு ஆர்டர்,ஒரு கட்டத்துல நம்மாலே வாங்க முடியாதோ அப்படி தோனுச்சி,சரி இரண்டு வருடம் தான் வாங்க முடியல வருகிற (2010)வருஷம்மாவது நமக்கு நல்லா இருக்கட்டும் அப்பவாது எப்படியாச்சு இதை வாங்கி விடுவோம்,அப்படி மனசை தேத்திகொண்டேன்,ஆனா அதை பார்க்கும் போதெல்லாம் ஒரு ஆசை,ஒரு வழியா அத்தான்கிட்ட பேசி இந்த மாதம் மட்டும் நான் உங்க செட்டில்மென்ட் பணத்தை கொண்டு அதை வாங்க போகிறேன் அப்படின்னு சொல்ல,அவரும் சரி வங்கிகொள் என்றார்.ஒரு வழியா வாங்க முடிவு பண்ணி ஆச்சு,எதை வாங்க அப்படினு
குழப்பம்,வாங்குறது நல்லதா வாங்கு,பணத்தை வேஸ்ட் பண்ணாதே.அப்படின்னு அக்கா அட்வைஸ் வேறே!
சரி கடைக்கு போவோம் அப்படி நண்பர்களோடு கிளம்பியாச்சு,அங்கே போன சார் இது தான் லேட்டஸ்ட்,இது நல்லா இருக்கும் அப்படின்னு கடைக்காரன் வேற குழப்ப,ஒரு வழியா முடிவு பண்ணி எடுத்தாச்சு என்னமோ எதையோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங்,இல்லையா பின்ன என்னோட மூன்று வருட கனவு ஆச்சே.....




(ஆமாங்க ஒரு வழியா போனவாரம் வியாழகிழமை
மடிகணினி (LAPTOP) வாங்கி விட்டேன்)

14 கருத்துகள்:

கமலேஷ் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே...உங்களிடம் இருந்து இனிமே தொடர்ந்து நிறைய போஸ்ட் வரும் வாழ்த்துக்கள் தொடருங்கள்...

Unknown சொன்னது…

வாழ்த்துகள்

S Maharajan சொன்னது…

முதல் வருகைக்கு/வாழ்த்துக்கும்
நன்றி கமலேஷ்...

நன்றி முகிலன்...

S Maharajan சொன்னது…

Hi smaharajan,

Congrats!

Your story titled 'ஒரு வழியா.......... வாங்கிவிட்டேன்!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 15th March 2010 02:14:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/204164

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

S Maharajan சொன்னது…

dina85,amalraaj,nanban2k9 ,jntube suthir1974 ,ashok92, subam, jegadeesh MVRS , gunaathamizh, spsaravanan, suthanthira-ilavasa-menporul, vimalind

tamilish popular பக்கத்திற்கு
கொண்டு சென்ற இந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி! நன்றி!

Pandian சொன்னது…

congrats!!!!

Pandian
Bahrain

Pandian சொன்னது…

congrats!!!!

S Maharajan சொன்னது…

Maruthu

முதல் வருகைக்கு/வாழ்த்துக்கும்
நன்றி!நன்றி!

பெயரில்லா சொன்னது…

ada ithu namma kathapola irukae...
i also tried two years to buy a laptop....
Arun....

S Maharajan சொன்னது…

WELCOME & THANKS ARUN

ஜீவன்பென்னி சொன்னது…

NAANUM DUBAI VANTHU ADUTHTHA ADUTHTHANNU 3NU VARUSAM ODIDUCHU. PAAPOM INTHA VARUSAM EPPUDI IRUKKUNNU.

S Maharajan சொன்னது…

@ஜீவன்பென்னி சொன்னது…
NAANUM DUBAI VANTHU ADUTHTHA ADUTHTHANNU 3NU VARUSAM ODIDUCHU. PAAPOM INTHA VARUSAM EPPUDI IRUKKUNN//

இந்த வருடம் நீங்கள் நினைத்தது நிறைவேற என் வாழ்த்துக்கள்

R.Gopi சொன்னது…

Congrats THALAIVA.....

Kalakkunga....

S Maharajan சொன்னது…

THANKS R.Gopi

கருத்துரையிடுக