திங்கள், நவம்பர் 29, 2010

தாய்நாடு பயணம்........

நண்பர்களே! வணக்கம்!

எனது திருமணம் வருகின்ற டிசம்பர் மாதம் (12-12-10)
நான் நாளை ஊருக்கு போகின்றேன்,ஒரு மாத காலம் வலையுலகிற்கு என்னால் வர இயலாது

(நேரம் கிடைத்தால் வந்து பார்க்கின்றேன்).

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைகின்றேன்

நாள் : 12-12-2010

இடம்: ஸ்ரீ லக்ஷ்மி மஹால்

K.T.C நகர்,

V.M சத்திரம்.

பாளையம்கோட்டை 

திருநெல்வேலி.

தொடர்புக்கு : செல் : 91 98406 29565

திரும்ப உங்கள் அனைவரயும் ஜனவரி  06-01-2011 திகதி சந்திகின்றேன்.உங்கள் அனைவர்க்கும் எனது
இனிய கிறிஸ்துமஸ் & புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ஒரு புதிய உறவினை என்னுடைய திருமணத்தின் மூலம், என் வாழ்வின் சரிப்பாதியை என்னவளுடன் இணைத்துக்கொள்ளும் இந்த அற்புதமான நேரத்திற்கு உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும்,வரவையும் எதிர் நோக்கி.....

உங்கள் வாழ்த்துகளோடு..................


என்றும் அன்புடன்

திங்கள், நவம்பர் 22, 2010

தலைவருக்கும் எனக்கும் உள்ள பந்தம்-பகுதி 4 + என் திருமணம்

ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள்..............           

போட்டோ கடையில் போய் நின்னா அவரு அப்போ தான் பிகு பண்ணுறாரு,சரிப்பா நீங்க போட்டோ நாளைக்கு வந்து வாங்கி கொள்ளுங்கள் அப்படின்னு சொல்ல ஒரே களேபரம்! என்னது நாளைக்கா,அண்ணே இப்போவே வேணும்,அப்படின்னு ஒரே சண்டை,சரி ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க அப்படின்னு சொல்ல இல்லை நாங்க வெயிட் பண்ணுறோம் நீ கொடு அப்படின்னு சொல்லியாச்சு,இதுக்கு இடையில் தலைவருடன் போட்டோ எடுத்ததை உள்ளூர் வெளியூர் அப்படின்னு ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் போன் பண்ணி அன்னைக்கு இருந்த காசை எல்லாம் போனுகே செலவு பண்ணியாச்சு, அண்ணே எப்படியும் இன்னைக்கு பார்ட்டி கொண்டனுமுனு தம்பி சிவா சொல்ல,கடன வாங்கி நைட் பார்ட்டி வேறே.

என் திருமணம்

ஒவ்வரு மனிதனுக்கும் வாழ்வின் திருப்பு முனையான தருணம் அவனது திருமணம். அதருக்கு உண்டான ஏற்பாடு வீட்டில் எனக்கும் நடக்க,பெண் பார்த்து என் பெற்றோர்கள் முடிவு செய்ய நாளும் குறிச்சாச்சு.அந்த நாள் DEC 12,2010  ஆமா நான் நேசித்து கொண்டு இருக்கும் என் தலைவனின் பிறந்த நாள் என் திருமணநாளாக என் பெற்றோர்களாலும் ,இறைவனாலும் முடிவு செய்யபட்டது. ஒரு ரசிகனாக என் பந்தம் தலைவர் ரஜினியுடன் தொடருகிறது இனியும் தொடரும்!
































இத்துடன் என் திருமண அழைப்பிதழும் இணைத்து உள்ளேன். வலையுலக நண்பர்கள் அனைவர்க்கும் நேரில் வந்து கொடுக்கவேண்டும் என்று தான் ஆசை.ஆனால் அதற்கான சாத்தியம் இல்லாதது வருத்தமே! இதையே என்நேர்முக அழைப்பாக ஏற்று எங்களை வாழ்த்துமாறு வேண்டி கொள்கிறேன்.


என்றும் அன்புடன்

திங்கள், நவம்பர் 15, 2010

தலைவருக்கும் எனக்கும் உள்ள பந்தம் - பகுதி 3

ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள்..............


தலைவர் வந்துட்டாருன்னு நியூஸ் வந்த உடனே நான் சக்தி சார் கிட்டே கேட்டேன் சார் இன்னைக்கு எப்படியாச்சும் தலைவர பார்த்துறலாம? அப்படின்னு உடனே அவரு இல்லப்பா ரெண்டு மூணு நாளா "சிவாஜி" விநியோகம் பத்தி பேசிகிட்டு இருகாங்க அதனால முடியாது
 அப்படின்னு சொல்ல உடனே நாங்க தூரத்துல இருந்தாச்சும் பார்த்துட்டு போறோமுன்னு சொல்ல அவரு டென்ஷன் ஆக, நான் உடனே சரி சார் நாங்க ஸ்டிக்கர் எடுத்துட்டு கிளம்புறோம்,அப்புறம் சக்தி சார் சொன்னாரு இன்னொரு நாளிக்கு ப்ரீயா இருப்பாரு அப்போ சொல்லி விடுறேன் வாங்க அப்படின்னு சொல்ல,நான் கிளம்பும் போது அங்கே நாகர்கோயில் மன்ற தலைவர் அமலன் அண்ணன் வந்தாரு,உடனே நான் அவர்கிட்டே அண்ணே தலைவர் இருக்காறு பாக்குறதுக்கு பெர்மீசன் கேளுங்க நாம இப்போ விட்ட திரும்ப வாய்ப்பு கிடைக்காதுன்னு அப்படின்னு சொல்லிட்டேன் .அவரும் சக்திசார் கிட்டே போய் சார்
ஏதாச்சும் வாய்ப்பு இருக்கா சார் அப்படின்னு கேட்டாரு, இரு நான் கேட்டு பாக்குறேன் அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டாரு ,ஒரு பத்து நிமிசத்துல வந்து சொன்னாரு  வெயிட் பண்ணுங்க அப்படி சொல்ல,எங்களுக்கு ஒரே சந்தோசம் நம்ம மூணு பேறு தான் இருக்கோம் எப்படி கொஞ்ச நேரம் பேசலாம் அப்படினு நினைத்து கிட்டே இருக்கும் போது கரூர் பகுதி மன்ற மக்கள் ஒரு பத்து பேர் வர எனக்கு ஒரே டென்ஷன் என்னடா இது கூட்டம் ஜாஸ்தி ஆன ரெண்டு நிமிஷம் கூட பேசமுடியாதே,அப்படின்னு டென்ஷன்,நான் ப்ரெண்ட்ஸ் சில பேர கூபிடலாமுனு போன் எடுக்குறேன் சக்தி சார் வந்தாரு,

நான் போன் பேசுவதை பார்த்துட்டு எப்பா நெல்லை தொல்லை கொடுக்க கூடாது. மொபைல் போனுல போட்டோ எடுகாதே, அவரா சொன்ன எடுத்துக்கோ அப்படின்னு சொல்லிடாரு ,சரி நாம்  பார்த்தா போதும் அப்படின்னு வெயிட் பண்ணுறோம், மேல ரூம்லில் இருந்து அழைப்பு வாங்க வந்து பார்க்கலாம் அப்படின்னு,மேல போய்  பார்த்தா எளிமையின் உருவாய், ஒரு பெரிய ஸ்டார் என்கின்ற பந்தா இல்லாமல் வந்த அனைவரையும் சிரித்த முகத்தோடு வரவேற்கிறார் என் தலைவர். திரையில் மட்டுமே பார்த்த அந்த உருவம் எங்கள் கண் எதிரே (ஒரு முறை படபிடிப்பு தளத்தில் பார்த்து இருக்கின்றேன்) அமைதியின் உருவாய் வரவேற்கிறார்.சக்தி இவங்க எல்லாம் சாப்பிட்டாச்சா? எந்த நடிகனும் தன் ரசிகனை பார்த்து கேட்காத கேள்வி (சற்று மிகை படுத்தி கூறுவதாக இருந்தாலும் இது தான் உண்மை). அப்புறம் சக்தி சார் அறிமுகபடுத்தி வைக்கிறார்,  இவங்க நெல்லை மாவட்டம் ரத்ததான கழகம் என்று எங்களை அறிமுகம் செய்யும் போது தலைவர் சொன்ன வார்த்தை "குட்". ஏதோ ஏதோ கேள்வி எல்லாம் கேட்க வேண்டும் என்று எண்ணி இருந்தோம் அவரை பார்த்த தருணம் ஒன்றுமே தோன்றவில்லை.சார் போட்டோ என்று ஒரு நண்பர் இழுக்க "SURE" என்றவாறு சக்தி  என்றார்.

அடுத்த நிமிடம் மண்டபத்துக்கு எதிரே உள்ள போட்டோகிராபர் அங்கே ஆஜர்,ஒவ்வருவரும் தனி தனியாக அவருடன் நின்று போட்டோ எடுத்து கொண்டோம்.


அந்த தருணத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது.எல்லாம் முடிந்து தலைவர் செல்லும் வரை நாங்களும் இருந்து விட்டு பிறகு சக்தி சார்ருக்கு நன்றி தெரிவித்து கொண்டு வந்தோம்.

போட்டோ கடையில் வெயிட் செய்த தருணம்



இன்னும் வரும்

என்றும் அன்புடன்

வியாழன், நவம்பர் 11, 2010

தலைவருக்கும் எனக்கும் உள்ள பந்தம் - பகுதி 2

ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள் - 2



"தளபதி" படம் வந்த சமயம் எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்,முதன் முதலாக நோட்டீஸ் அடித்த நேரம்
அப்போது எல்லாம் இப்போ இருப்பது போல லித்தோ எல்லாம் பேமஸ் இல்லை,நூறு நோட்டீஸ்கே முப்பத்தைந்து ரூபாய் தான் எல்லாம் விதமான கலர்ரிலும் இருக்கும், இரவு முழுவது நானும் நண்பர் சுந்தர்ம் சேர்ந்து எல்லா இடத்திலும் ஒட்டி ஆயிற்று, வீடிந்தால் தீபாவளி, காலையிலே எட்டு மணிக்கே தியேட்டர் போனால் படம் இரண்டாவது ஆட்டம் போய் கொண்டு இருக்கு என்னவென்று கேட்டால் காலையிலே நாலு மணிக்கே படம் போட்டவிட்டர்கள் என்று பதில்,சரி எப்படியும் பார்த்து விட வேண்டுமென்று என்று உக்க்கர்ந்து இருந்தும் பயன் இல்லை,அன்று படம் பார்க்க முடியவில்லை.மறு நாள் பள்ளிக்கு வேறு செல்ல வேண்டும். பள்ளிக்கு மட்டம் போட எண்ண செய்யலாம் என்று தீவர யோசனைக்கு பின் கண்வழி (அப்போ கண் வழி சீசன்)என்று சொல்லிவிட்டு நான் வந்த்துடுறேன் நீயும் வந்துரு என்று சுந்தர்ரிடம் பேசிவிட்டு முடிவு பண்ணியாச்சு.பள்ளிக்கு சென்று வகுப்பு ஆசிரியர் திரு.சூசை மாணிக்கம் அவர்களிடம் போய் சார் கண்ணு வழி என்று அவரோ ஏல உண்மைசொல்லு படம் பார்க்கதானே போறே என்று கேட்டார், பின் எப்படி அவருக்கு தெரியாமல் இருக்கும் அவரோ பக்கா தலைவர் வெறியர்,
 ஆமா சார் நேற்று போனேன் டிக்கெட் கிடைக்கலை,அதான் என்று என்று சொல்ல சரி போயிட்டு வா என்று சொல்லிவிட்டார். பிறகு மெல்ல மெல்ல மாவட்ட தலைவர் பானுசேகர் அவர்களுடன் மற்றும் அண்ணன் தாயயப்பன் ஆகியோருடன் இணைந்து மாவட்ட மன்றத்திலே என்னை இணைத்து கொண்டேன். அதன் பின் வரிசையாக மன்ற பணி,ரத்ததான கழகம் என்று எங்கள் பணி தொடர்ந்து வருகிறது.





வாழ்வில் மறக்க முடியாத நாள் (ஏப்ரல் 18,2007 )

அப்போது சென்னையில் வேலை பார்த்து கொண்டு இருந்த சமயம் ஏப்ரல் 18,2007 காலையில் அண்ணன் பானுசேகர்ரிடம்,அண்ணன் தாயயப்பன்னிடம் இருந்து போன் தம்பி காலையில் நேராக மண்டபத்துக்கு போய் சக்தி சாரை பாரு அங்கே ஸ்டிக்கர் கொடுபங்க,வாங்கி கொரியர் அனுப்பிடு அப்படின்னு சொன்னாரு,நானும்,தம்பி சிவாவும் நேரே ராகவேந்திரா மண்டபத்துக்கு சென்று சக்தி சாரை பார்த்து பேசிகிட்டு இருந்தோம். அவரும் மன்ற பணிகள் எப்படி இருக்கு அப்படி கேட்டாரு,நல்ல இருக்கு சார் அப்படி பதில் சொல்லிக்கிட்டு இருக்கும் போது, அங்கே தலைவர் வந்துட்டாருன்னு நியூஸ்..


இன்னும் வரும்

என்றும் அன்புடன்

ஞாயிறு, நவம்பர் 07, 2010

தலைவருக்கும் எனக்கும் உள்ள பந்தம்

ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள்..............





ரஜினி இந்த ஒரு மந்திர சொல் கட்டி போட்டு இருக்கும் இதயங்கள் தான் எத்தனை!எத்தனை! ரஜினி என்ற உணர்வு அதை வார்த்தைகளால் சொல்ல இயலாது! 1985 வருடம் முதல் இன்று வரை அவருடன் எனக்கான ரசிகன் பந்தம் பற்றி தான் இந்த நினைவலைகள்


எப்போது ரசிகன் ஆனேன்!


1985 படிக்காதவன் படம் வெளியான வருடம்,எங்கள் பாளையம்கோட்டை அசோக் தியட்டரில் என் அண்ணன் முலமாக நான் பார்த்த முதல் ரஜினி படம்,சினிமாவை பற்றி அதிகம் நான் அறியாத வயதிலேயே என்னை ஈர்த்த என் தலைவன்! அதன் பின் அவருடைய படம் பேப்பர்லில் வந்தால் அதை வெட்டி வைத்து கொள்ளும் பழக்கம்,அதிசிய பிறவி படத்திற்கு காசு இல்லாமல் வீட்டில் இருந்து எடுத்துபோக அப்போது அப்பா அடித்த வலியை விட தலைவர் படத்தில் அடித்த காமெடி இனித்தது. மெல்ல மெல்ல என்னை ஆக்கிரமித்தார் ரஜினி என்கின்ற அந்த வசீகரன்.



இன்னும் வரும்............


என்றும் அன்புடன்

புதன், செப்டம்பர் 22, 2010

நான் எந்திரன் பார்பேன்

எந்திரன்

இது நாள் வரை பதிவுலக நண்பர்கள் பலர் "தலைவர் ரஜினியை"விமர்சித்தி எழுதிய எந்த பதிவுக்கும் நான் கோவமாக பின்னுட்டம் கூட இட்டது கிடையாது. நேற்று நண்பர் ஒருவர் பதிவை பார்த்த போது அதில் எந்திரன் படத்துக்கு கேவலமாக வாழ்த்து தெரிவித்து இருந்த ஒருவருக்கு காட்டமாக பதில் சொல்லி இருந்தார்.வாழ்த்து சொன்ன அந்த நபர் தன் "பக்கங்களில்" எவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் என்றால் "சீக்கிரம் அந்த ’சனியன்’ வந்து தொலையட்டும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்." அதன் பின் அவர் பக்கங்களில் (பதிவுகளில்௦௦௦) சென்று நான் படித்த போது தான் தெரிந்தது அவரருடைய கேவலமான பேச்சு (பதிவு) எப்படி இருந்தது என்று.

150 கோடியில் சன் நிறுவனம் படம் தயாரிப்பது குற்றமாம்?

அதில் ரஜினி நடிப்பது மாபெரும் குற்றமாம்?

வளரும் படைபாளிகளை எந்திரன் நசுக்கி விடுமாம்.



எந்திரன் என்ன ரஜினி நடிக்க இயலாத படமா? என்னவோ தமிழ்நாட்டை சன்டிவியும்,ரஜினியும் சேர்ந்து கொள்ளை அடிப்பதாக இவர்களின் புலம்பல்கள். இவர்களுக்கு ரஜினி என்றால் ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை எவ்வளவு தரம் தாழ்த்தி முடியுமோ அவ்வளவு பேசவும் ஏசவும் செய்து விட்டு,ஹைலைட்டாக காமெடி வேறே செய்வர்கள் முன்பு இவர்கள் எல்லாருமே ரஜினி ரசிகர்களாம்.ஆனால் இப்போது தான் இவர்களுக்கு ரஜினியை பிடிக்காதாம்.



அவர் முன்பு இருப்பது போல இருந்தால் இன்று அவரை பற்றி இவ்வளவு பேசவும்,எழுதவும் முடியுமா? பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை கமல் ஏதோ சொல்லி விட்டார் என்று அவரை அடிக்க பாய்ந்தவர் ரஜினி என்று இங்கே எத்தனை பேருக்கு தெரியும்?  அதன் பின் தன் தவறை உணர்ந்து இன்று வரை கமலிடம் நட்பு பாராட்டி வருகிறார்,பிறகு பிரபலம் கொடுத்த அதிகாரத்தை அவர் தனது எதி‌‌ரிகளின் மீது ஒருபோதும் பிரயோகித்தது இல்லை. இருபத்தைந்து வருடங்களா தன்னை நம்பி பணம் போட்ட தயாரிபாளர்களை அவர் என்றுமே ஏமாற்றவில்லை.தமிழ் சினிமாவை உலக வர்த்தகத்துக்கு கொண்டு சென்ற ஒரே நடிகர் ரஜினி மட்டுமே!  சிவாஜி,எம்ஜிஆரை விடக்கூட ரஜினி ஒரு படி மேலேதான் நிற்கிறார்.அவரை விமர்சிபவர்களை கேலவமாக என்னாலும் எழுதமுடியும் ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை

நான் ரஜினி வெறியன்

ஆரம்பத்தில் இருந்தே உண்மை ரஜினி ரசிகர்கள் இன்று வரை அவரது உண்மை ரசிகர்களே. அடிக்கடி நிறம் மாற நாங்கள் பச்சோந்திகள் அல்ல.! இவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லுகிறோம்

ரஜினி தனி மனிதன் அல்ல....

நான் எந்திரன் னை 100 முறை பார்பேன்

இந்தத் பதிவு எழுதகாரணமாகஇருந்த "பாகீரதி" கார்த்திக்க்கு என் நன்றிகள்



என்றும் அன்புடன்
 

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

சிந்தனைகள்_3



உயர்ந்த இலக்கு ஒன்றே


செய்வனை திருந்த செய்!

இரு கண்கள்

1.வந்தால் போகாதது , இரண்டு : புகழ், பழி

2.போனால் வராதது இரண்டு : மதிப்பு( மானம்) உயிர்

நான்கு உணவருந்தும் திசை பலன்கள்

கிழக்கு : ஆயுள் பெருகும்

மேற்கு : செல்வம் பெருகும்

தெற்கு : புகழ் பெருகும்

வடக்கு : உணவு அருந்துவதை தவிர்க்கலாம்

ஐவகை முன்னோடிகள்

1.வளர்த்த பெற்றோர்கள்

2.கல்வி கற்பித்தோர்

3.மனமுடித்த உறவினர்

4.பொருள் தேட தொழில்கற்பித்தோர்

5.இடுக்கண் களையும் நட்பு

ஆறு வகை முட்டாள்கள்

1.நேற்று செய்த தவறை திருத்தி கொள்ளாதவன்

2.வாய்பு வரட்டும் என்று காத்து இருபவர்கள்

3.அவசியம் என்று உணர்ந்த பின்பும் தன்னை மாற்றிகொள்ளதவர்கள்

4.தேவை இல்லாத இடத்தில் பொருளை வாரி இறைபவர்கள்

5.வெற்றியாளருக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று  தவறாக  நினைபவர்கள்

6.இனி என்னால் முடியாது என்று நுனிபுல் மேய்ந்து விட்டு பிரச்னையை   தீர்க்காமல் ஒதுங்குபவர்கள்

ஏழு நன்மைகள்

1.ஏழ்மை யிலும் நேர்மை

2.கோபத்திலும் பொறுமை

3.தோல்வியிலும் விடா முயற்சி

4.வறுமையிலும் பரோபகாரம்

5.துன்பத்திலும் தைரியம்

6.செல்வதிலும் எளிமை

7.பதவியிலும் பணிவு


அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு!

செவ்வாய், செப்டம்பர் 14, 2010

சிந்தனைகள்-2


நவ ரத்தினங்கள்

1.புத்தகத்தை வாங்கலாம் ஆனால் அறிவை வாங்க முடியாது!

2.உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்க முடியாது!

3.பகட்டை வாங்கலாம் ஆனால் பண்பாட்டை வாங்க முடியாது!

4.கட்டிலை வாங்கலாம் ஆனால் உறக்கத்தை வாங்க முடியாது!

5.கேளிக்கைகளில் கலந்து கொள்ளலாம் ஆனால் மகிழ்ச்சியை வாங்க  முடியாது!

6.ஆயுதங்களை வாங்கலாம் ஆனால் வீரத்தை வாங்க முடியாது!

7.ஊழியர்களை அமர்த்தலாம் ஆனால் சேவை மனப்பான்மையை வாங்க முடியாது!

8.அமைதியான இடம் வாங்கலாம் ஆனால் மன நிம்மதியை வாங்க முடியாது!

9.சிலையை வாங்கலாம் ஆனால் ரசிக்கும் திறனை வாங்க முடியாது!

உயரிய பத்து வெகுமதிகள்

1.மிக மிக நல்ல நாள்     : இன்று

2.மிக பெரிய வெகுமதி : மன்னிப்பு

3.உயர்வுக்கு வழி             : உழைப்பு

4.நழுவவிட கூடாதது   : வாய்ப்பு

5.விலக்கவேண்டியது   : விவாதம்

6.கொடிய நோய்              : பொறமை

7.மிக பெரிய தேவை    : சமயோசித புத்தி

8.செய்யவேண்டியது     : உதவி

9.தவிர்க்க வேண்டியது   : வெறுப்பு

10.நம்பகூடாதது                 : வதந்தி

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு விளையாட்டு  அதனை விளையாடுங்கள்

வாழ்க்கை ஒரு வினோதம்  அதனை கண்டறியுங்கள்

வாழ்க்கை ஒரு பாடல் அதனை பாடுங்கள்

வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்  அதனை பயன்படுத்திகொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு உறுதிமொழி  அதனை நிறைவேற்றுங்கள்

வாழ்க்கை ஒரு அன்பு  அதனை நேசியுங்கள்

வாழ்க்கை ஒரு அழகு   அதனை ஆராதியுங்கள்

வாழ்க்கை ஒரு இலக்கு   அதனை எட்டிபிடியுங்கள்

வாழ்க்கை ஒரு துயரம்   அதனை தாங்கிகொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு உணர்வு    அதனை உணர்ந்துகொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு குழப்பம் அதற்கு விடை காணுங்கள்

வாழ்க்கை ஒரு ஞானம்  அதனை அறிந்து கொள்ளுங்கள்


அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு!

திங்கள், செப்டம்பர் 06, 2010

சிந்தனைகள்!



· ஒரு மனிதன் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று          தீர்மானித்துக் கொள்கிறானோ, அந்த அளவுக்குத்தான் அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.


· எதையும் சிறப்பாகவும், முழுமையாகவும் நாம் செய்ய வேண்டுமானால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. கற்பனையில் அதைப் பயிற்சி செய்வதுதான் அந்த வழி.

· நமக்கு என்ன கிடைத்திருக்கிறதோ அதைப்பற்றி நாம் அதிகம் எண்ணிப் பார்ப்பதில்லை. எது நம்மிடம் இல்லையோ அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

· நீங்கள் விரும்பாதவர்களைப் பற்றி சிந்தித்து ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காதீர்கள்.

· மனச் சுமையை இறக்கிவைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனதைக் குடைவது எதுவானாலும், அதனை உடனுக்குடன் பேசி வெளியேற்றி விடுங்கள்.

· காரியத்தைச் செய்யுங்கள்; சக்தி தானாகவே வரும்.

· மனிதன் எதை நினைத்தாலும், எதை நம்பினாலும், அதை சாதிக்க முடியும். தயக்கமோ அச்சமோ இன்றி வேலையைத் தொடங்குங்கள். செய்யத் தொடங்கிவிட்டால், செய்வதற்குத் தேவையான சக்தி உங்களுக்குத் தானாகவே கிடைத்துவிடும்.

.நான் நீ என்னும் போக்கை தவிர், நாம் என்னும் உணர்வை பெறு

.குடும்பம் என்பது இரு சக்கர வாகனம் போன்றது, கணவன்
மனைவி என்ற இரு சக்கரமும் ஒத்து இருந்தால் தான்
வண்டி ஓடும்.



வாழ்கை ரகசியங்கள் எட்டு

1. அன்பு காட்டு ஆனால் அடிமை ஆகாதே!

2. இரக்கம் காட்டு ஆனால் ஏமாந்து விடாதே

3. பணிவாய் இரு ஆனால் கோழையாய் இராதே!

4. கண்டிப்பா இரு ஆனால் கோவ படாதே!

5. சிக்கனமாய் இரு ஆனால் கஞ்சனாய் இராதே!

6. வீரனாய் இரு ஆனால் போக்கிரியாய் இராதே!

7. சுறுசுறுபாய் இரு ஆனால் பதட்ட படாதே!

8. உழைப்பை நம்பு ஆனால் கடவுளை மறந்து விடாதே !


என்றும் அன்புடன்

செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

இதயத்தில் மலர்ந்த நட்"பூக்கள்”

இதயத்தில் மலர்ந்த நட்"பூக்கள்”




என் சகோதரன் என் சட்டையை
பயன்படுத்தினால் கூட
எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ
எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது.

காதலியோடு பேசுகையில் கூட
முகமூடி அணிந்து பேசுகிறேன்.
ஆனால் என் நட்பின் முன்னாலோ
எவ்வித முகமூடியுமின்றி
நான் நானே இயல்பாய் இருக்கிறேன்.

கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்..
பேருந்தில் செய்த குறும்புகள்...
மொட்டை மாடி அரட்டைகள்..
பள்ளி மைதான விளையாட்டுகள்...
என அத்தனை நினைவுகளும்

இன்னமும் பசுமையாய் இதயத்தில்....
நண்பனின் கை அருகில் இருக்கையில்
நம்பிக்கையும் கூடவே...
வீட்டில் பெற்றோர் இல்லா நேரங்கள் சொர்க்கம்..
நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,
ஒருவர் மீது ஒருவர் படுத்து,
அடித்து விளையாடி,
கண்ட கண்ட சேனல் மாற்றி,
பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி,
சமைக்க தெரியாமல் சமைத்து,
காஃபி என்ற பெயரில் ஏதோ அருந்தி,
என சந்தோஷங்களோடே
வாழ்ந்த காலங்கள் வரம்..


இன்று வித விதமான பைக்கில்
பயணம் செய்தாலும் கிடைப்பதில்லை
நண்பனின் பின்னால் அமர்ந்து
சைக்கிளில் டபுள்ஸ் போன சுகம்..
ஒன்றாய் அமர்ந்து படிக்கிறோம்
என்ற பெயரில் பாடத்தை தவிர
அனைத்தை பற்றியும்
பேசிக்கொண்டு இருப்போம்..

அப்பாவிற்கு மட்டுமே
கடிதம் வரும் காலங்களில்
எனக்கும் கடிதம் வந்திருக்கிறது என
பெருமைப்பட்ட நேரங்கள்..
ஆம் நண்பனிடமிருந்து வந்த
ஒற்றை கிரீட்டிங் கொடுத்த மகிழ்ச்சி..

பள்ளி நாட்களில் உணவு கொண்டு வராத
சமயங்களில் நண்பர்களிடமிருந்து
பகிர்ந்து உணவு உண்ட சமயங்கள்
மீண்டும் எப்போது கிடைக்கும்?

நண்பர்களிடம் சண்டை போட்டு
பேசாமல் இருந்த காலங்களை நினைத்து
பார்க்கையில் இப்போது சிரிப்பாய் இருக்கிறது.

பள்ளி முடிந்ததும்
சீருடை தொலைக்கிறோம்.
வளரத்தொடங்கியதும்
நட்பை தொலைக்கிறோம்.

எத்தனை எத்தனை சந்தோஷமான
தருணங்கள் நட்பில்..
அத்தனையும் தொலைக்கிறோம்
இயந்திரத்தனமான வாழ்க்கையின் இடையே...

வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம்.
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?

கடவுள்
சங்கடத்தை அனுபவிக்க
காதலை அனுப்புகிறார்...
சந்தோஷத்தை அனுபவிக்க
நட்பை அனுப்புகிறார்...



ஈமெயில்யில் வந்த நட்பு கவிதை

வியாழன், ஜூலை 29, 2010

க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை!

                                                                                                                                                                                                                                                                                           

அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம் அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌அமைதியான‌வ‌ன்.சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை.


அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000.

பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின் 2 வருடத்துக்கு ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.

ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.

அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்! அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.

பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 3500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.

இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.

ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?

இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!



                                                      

செவ்வாய், ஜூலை 27, 2010

இல்லை!இல்லை!இல்லை!


1.அரேபியாவில் ஆறுகள் இல்லை

2.அத்தி, பலாமரங்கள் பூ பூப்பதில்லை.

3.ஆமைக்குப் பற்கள் இல்லை.

4.இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை.

5.இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை.

6.இலந்தைமரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.

7.இந்தியாவில் எரிமலைகள் இல்லை.

8.ஈசலுக்கு வயிறு இல்லை.

9.உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை.

10.ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.

11.ஒட்டகங்களுக்கு நீந்தத் தெரிவதில்லை.

12.ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை.

13.கடலில் முதலைகள் வாழ்வதில்லை.

14.பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.

15.பக்ரைன் நாட்டு தேசியகீதத்தில் வார்த்தைகளே இல்லை.

16.மாசிடோனியா நாட்டுக்கு தேசியக் கொடி இல்லை.

17.மலைப் பாம்புகளுக்கு நஞ்சு இல்லை.

18.யமுனை நதி கடலில் கலப்பதில்லை.

19.யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.

20.வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாயில்லை.

21.ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.

22.ஸ்பெயின் நாட்டில் தந்தை பெயரை முதல் எழுத்தாகப் பயன்படுத்தவில்லை.

23.கிவி பறவைக்கு இறக்கைகள் இல்லை.

24.குயில்கள் கூடுகட்டி வாழ்வதில்லை.

25.குயில்கள் குளிர்காலத்தில் கூவுவதில்லை.

26.பூடான் நாட்டில் திரைஅரங்குகள் இல்லை.

27.பூச்சிகளும் புழுக்களும் தூங்குவதில்லை.

28.சிங்கப்பூரில் காகங்கள் இல்லை.



"இது என் நண்பர் எனக்கு மினஞ்சலில் அனுப்பியது"


திங்கள், ஜூலை 26, 2010

பாகிஸ்தான் ஆகிரமிப்பு செய்த காஷ்மீர் இடங்கள்







 






வியாழன், ஜூலை 01, 2010

"இதயத்தை பாதுகாக்க யோசனைகள்"

"இதயத்தை பாதுகாக்க யோசனைகள்"
அப்பலோ மருத்துவமனை "Billion Hearts Beating" என்றொரு நல்ல பணியை துவக்கியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://www.billionheartsbeating.com/ என்ற இணைய தளத்தை பாருங்கள்.


குறிப்பாக இந்த பக்கத்தில் "இதயத்தை பாதுகாக்க யோசனைகள்" என்ற தலைப்பில் இவர்கள் தந்துள்ள குறிப்புகள் பயன் தரக்கூடியவை . கிட்டத்தட்ட 92 யோசனைகள் அவர்கள் தந்துள்ளனர். அவற்றில் முக்கியமான குறிப்புகளின் தமிழாக்கத்தை இரண்டு பகுதிகளாக இங்கு பகிர்கிறேன். நான் அதிகம் ரசித்தவை சற்று "Bold" -செய்து தந்துள்ளேன் முதல் பகுதி இதோ:

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

3. உடல் எடை குறைவு - சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.

5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.

7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.

13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).

16.கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.

17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !

18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.

23. சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.

24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்

25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என ( Optimist ) நம??புங்கள்.

27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்

29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.


இது என் நண்பர் எனக்கு மினஞ்சலில் அனுப்பியது



என்றும் அன்புடன்

வெள்ளி, ஜூன் 25, 2010

திருமணநாள் நல்வாழ்த்துக்கள்



என் சுக துக்கங்களில் பங்குஎடுத்து கஷ்டபட்ட நேரத்தில் கை கொடுத்து உதவி என்னை ஆசுவசபடுத்திய நண்பன்.எல்லாரும் உன்னை தவறா சொல்லுகின்ற தருணத்தில் கோவபடதே!உனக்கு என்ன இல்லை சொல்லு உன்னை கேவலமாக நினைத்தவர்கள் முன்னால் நீ வாழ்ந்து காமி உன்னாலே முடியும் என்று நம்பிக்கை ஊட்டிய தோழன் கிருபானந்தன்.இன்னும் அதிகமாக சொல்லலாம் ஆனால் அவன் அதை விரும்ப போவதில்லை. புகழ்வதால் மட்டுமே தொடருவதில்லை எங்கள் நட்பு!

மனித உறவுகளில் எல்லாம்
மகத்தானது நட்பு..!

என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள் அவனுக்கான 
இந்த திருமண நாள் (25-06-10) தினத்தில்.....!


என்றும் அன்புடன்

திங்கள், ஜூன் 21, 2010

வருந்துகிறேன்

தெரிவித்து கொள்கிறேன்.


அலுவல் பணி அதிகமாக இருபதாலும்,அலுவலகத்தில் தமிளீஷ் சரியாக வராத காரணத்தினாலும் நண்பர்களின் வலைதளதிற்கு என்னால் சரியான நேரத்துக்கு வர இயலவில்லை என்பதனை (வருத்ததோடு) தெரிவித்து கொள்கிறேன்.

காலையில் பைசல் செய்ய முடியாதை மாலையில் வீட்டிற்கு சென்று பைசல் (வோட்டு) செய்து விடுவேன் என்பதனையும் உறுதியோடு கூறி கொள்கிறேன்

என்றும் அன்புடன்

ஞாயிறு, ஜூன் 20, 2010

ராவணன் - விமர்சனம்




திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் விக்ரம், பழங்குடி மக்களுக்கு சகலமுமாக இருப்பவன். ஆனால் சட்டத்தின் பார்வையில் அவன் மோசமானவன். விக்ரமின் கொட்டத்தை அடக்க அந்த ஊருக்கு வரும் காவல்துறை அதிகாரி பிருத்விராஜ், அவருடைய மனைவிதான் ஐஸ்வர்யா ராய்.


விக்ரமின் தங்கைக்கு திருமணம் நடக்கும்போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து விக்ரமை போட்டுத் தள்ளப் பார்க்க, குண்டு காயத்துடன் அவர் தப்பிக்கிறார். உடனே அவர் தங்கை ப்ரியாமணியை தூக்கிப் போகும் அதிரடிப் படையினர், அவளை கற்பழிக்கிறார்கள். வீடு திரும்பும் அவள் விக்ரமிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.

இதற்கு பழிவாங்க பிருத்விராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயை கடத்தி காட்டுக்குள் வைக்கிறார் விக்ரம். கடத்தப்பட்ட மனைவியை மீட்கவும், விக்ரமை கொல்லவும் ஒரு படையுடன் காட்டுக்கு புறப்படுகிறார் பிருத்விராஜ். அப்படி புறப்பட்டவர் காட்டு ராஜாவாக வலம்வரும் விக்ரமை பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதி கதை!

விக்ரம் நடிப்பில் அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்துள்ளார். கோபம், அமைதி, சிரிப்பு, தவிப்பு, தாபம், வெறி, சோகம் என நடிப்பின் அத்தனை பரிமாணத்திலும் கலக்குகிறார். அதிகமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளிலும் சர்வசாதாரணமாக சாகசம் புரிந்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்க்கு அழகு குறையவே குறையாது போலிருக்கிறது. அப்படியே விக்ரமுக்கு பயப்படாமல் எதிர்த்து நிற்கும் ஐஸ்வர்யா, விக்ரமின் பேச்சில் சலனம் ஏற்பட்டு அதற்கு அவர் கொடுக்கும் முகபாவனை பிரமாதம்

பிருத்விராஜ், பிரபு,கார்த்திக்,ப்ரியாமணி என்று அனைவரும் தத்தம் தங்களுது பங்களிப்பை செவனே செய்து உள்ளனர்.

படத்தின் இன்னுமொரு நாயகன் சந்தோஷ் சிவன் அத்தனை காட்சிகளிலும் ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர்! தமிழில் வேறு எந்தப் படத்திலும் இத்தனை அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது

வசனம் சுஹாசினி (மஹா சொதபல்)திருநெல்வேலித் தமிழ் இத்தனை கொடூரமானதா? என்று திருநெல்வேலிகாரணன எனக்கே சந்தேகத்தையே எழுப்பி விட்டது சுஹாஸினி படத்தில் வைத்திருக்கும் ஸ்லாங்கைப் பார்த்து! ஓர் இரு இடங்களில் அப்படியே சித்தப்பா கமல் தெரிகிறார்.

உங்க சாமி எப்படி இருப்பர் ?

ரொம்ப நல்லவரோ?

படத்துக்கு மற்றொரு பலம் ஆஸ்கார் நாயகனின் இசை

வழக்கமான மணிசார் படம் இல்லை நெறய லாஜிக் சொதபல்.

மொத்தத்தில் ராவணன் பார்க்கலாம் ரகம்.




 என்றும் அன்புடன்

செவ்வாய், ஜூன் 15, 2010

நட்பு

படித்தில் பிடித்தது



போகிற இடத்தில் என்னை விட

அழகாய் அறிவாய் ஒருவன் இருந்து
விடுவனோ என்கின்ற பயம்
நட்புக்கு இல்லை!


உனக்காக நானும்

எனக்காக நீயும்
தனி தன்மை இலக்காத
நட்பு ஆழமானது!




துளியே கடல்
என்கிறது காமம்!
கடலே துளி
என்கிறது நட்பு!


என்றும் அன்புடன்

திங்கள், ஜூன் 07, 2010

"50" வது பதிவு! நன்றி பதிவு!

நன்றி பதிவு!
ப்ளாக் எழுத் போகிறேன் என்றதும் அதருக்கு உர்துனையாக இருந்த சுரேஷ் அண்ணாவிற்கு முதல் நன்றி.முதலில் என்னை பின் தொடர்ந்த "முகிலனுக்கு" நன்றி,முதல் விருதை கொடுத்தஎன்னை பெருமை படித்திய தோழி "திவ்யா ஹரி"க்கு நன்றி.(இவங்களை இப்போ கொஞ்ச நாளாகவே பிளாக் பக்கம் காணோம்),தொலைந்த நட்பை பிளாக் முலம் மீட்டு எடுத்து கொடுத்ததும் மட்டுமல்லாது,தவறாமல் வந்து பின்னுட்டம் அளித்து உற்சாகபடுத்தும் "சித்ரா அக்கா"வுக்கு நன்றி.இரண்டாவது விருது கொடுத்ததோடு அல்லாமல் பிளாக்இல் எனக்கு ஏற்படுகின்ற சந்தேகத்தை மினஅஞ்சல் முலம் தெளிவுபடுத்துகின்ற தோழர் "சசி"க்கு நன்றி. "வேலன்" சார்க்கு நன்றி,ஜோக்கிரி "கோபி"க்கு நன்றி

வலைசரத்தில் என்னை அறிமுகபடுத்தி பெருமை கொடுத்த நண்பர் "ஸ்டார்ஜன்" க்கு நன்றி. கவிதையோடு வந்து வாழ்த்து சொல்லுகின்ற கவிதாயனி "அன்புடன் மலிக்கா"க்கு நன்றி. வாழ்த்து சொல்லி வாழ்த்துகின்ற என் நெல்லை மண்ணின் வேங்கைகள் "கோமா,அன்புடன் ஆனந்தி,கௌசல்யா" ஆகியோருக்கும் நன்றி

தோழி "பவி"க்கும் ,தோழி "தாருஹசினி"க்கும் நன்றி.தவறாமல் வந்து ஆலோசனை வழங்கும் "மங்குனி அமைச்சருக்கு" நன்றி.தோழர் தேவா வுக்கு நன்றி,தோழி சுபிவன்யா (பிரேமா மகள்),தமிழ் அமுதன்,விஜய்,முனைவர் குணா,குரு,என் இனிய இல்லம் சிநேகிதி,செல்ல குரு அடிகடி என் தளத்தை குளிருடுகின்ற பனிதுளி ஷங்கர்,ஒரே முறை மட்டும் என் குடிலுக்கு வந்து வெளிச்சம் தந்த நிலாமதி,இந்த நெல்லை எக்ஸ்பிரஸ்லயும் பயணம் செய்த நாஞ்சில் எக்ஸ்பிரஸ், ரியாஸ்,முஹம்மத்,சௌந்தர் ,ரமேஷ் ரொம்ப நல்லவன்,

பின்னுட்டங்களில் காட்சி தராவிட்டாலும் தமிழிஷ் ஒட்டு வங்கியில் தொடர்ந்து காட்சி தந்து கொண்டு இருக்கின்ற "அண்ணாமலையாருக்கும் (எப்படி எல்லாம் உங்களை பின்னுட்டம் போடா கூப்பிட வேண்டி இருக்கு வாங்க சார் வாங்க) கும்மாஞ்சி,நாடோடி.பாஸ்கர் அண்ணன்,சுதாகர் ( வேறு யார் பெயராவது விட்டு போகி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்) என்னை(யும்) நம்பி என்னுள் கலக்க போகின்ற "அமுத" மாணவளுகும் நன்றி.



பதிவுலகத்திற்கு வந்து இந்த நான்கு மாதத்தில் நான் தொடும் 50 வது பதிவு இது.ஆரம்பத்தில் எழுத நினைக்கும் போது நாம் எனன எழுத்போகிறோம்,யார் நம்மை பின் தொடருவார்கள் என்றெல்லாம் எண்ணியது உண்டு.ஆனாலும் என்னை தொடருகின்ற இந்த 30
பாலோவேர்ஸ் மற்றும் என் தளத்திற்கு வந்து சென்ற வர போகின்ற எல்லோருக்கும் நன்றியாக இந்த பதிவை சமர்பிக்கிறேன்.

                                          


                                     நன்றி! நன்றி! நன்றி!

என்றும் அன்புடன்