திங்கள், பிப்ரவரி 01, 2010

இசை புயலுக்கு வாழ்த்துக்கள்

இந்த முறையும் சொல்லியடித்துள்ளார் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். இசைத் துறையில் உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கூறப்படும் கிராமி விருதுகளில் இரண்டை வென்றுள்ளார் ரஹ்மான்.

ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ…’ பாடலுக்காகவும், அந்தப் படத்தில் ரஹ்மானின் சிறந்த இசைக்காகவும் இந்த இரு விருதுகளும் கிடைத்துள்ளன

இது எல்லாம் கடவுள் அருளால் தான் நடந்துள்ளது. இறைவனுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தியர்களின் பேராதரவும், அன்பும் அவர்களது பிரார்த்தனையும் எனக்கு எப்போதும் உள்ளது. இதன் மூலம் இந்த கிராமி விருதை பெற்றதை இந்தியர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சி கொள்கிறேன் என்று அவர் கூறினார்.