வலை தமிழ் மக்களுக்கு இனிய வணக்கம்
வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் வலை பதிவில் நான். இந்த முறை என் சொந்த கதை, இது சுய சரிதை அல்ல, என் சுயத்தை நான் பரிசோதிக்க நினைக்கும் ஒரு முயற்சி! சுயசரிதை என்றால் உண்மையை மட்டுமே எழுத வேண்டும் , அது என்னை சார்ந்த என்னுடன் இருக்கும் பல இதயங்களை காயபடுத்தும், அது என் எண்ணமல்ல, முடிந்தவரை அவ்வாறு நடக்காமல் எழுத வேண்டும் என்பது தான் என் எண்ணம்.
என் கதை என் பாடம் -1
தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது
"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில்
முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில்
"தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்.மேலும்
இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இத்
திருமாவட்டதில் முறப்பநாடு (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) என்கின்ற கிராமத்தில் பிறந்த சுடலையாண்டி-கலா அவர்களுக்கு மூன்றாவது மகனாக (இறைவன் தவம்
இருந்தான் நான் இவர்களுக்கு மகனாக பிறக்க) பாசகார உள்ளங்களை மட்டுமே கொண்ட
பாளையங்கோட்டையில் 1979 வருடம் பிப்ரவரி மாதம் பிறந்த நான், பஞ்ச பாண்டவர்கள் போல
ஐந்து உடன்பிறப்புகளை கொண்டவன்……..
கதை தொடரும் ................
அன்புடன்
சு. மகாராஜன்
வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் வலை பதிவில் நான். இந்த முறை என் சொந்த கதை, இது சுய சரிதை அல்ல, என் சுயத்தை நான் பரிசோதிக்க நினைக்கும் ஒரு முயற்சி! சுயசரிதை என்றால் உண்மையை மட்டுமே எழுத வேண்டும் , அது என்னை சார்ந்த என்னுடன் இருக்கும் பல இதயங்களை காயபடுத்தும், அது என் எண்ணமல்ல, முடிந்தவரை அவ்வாறு நடக்காமல் எழுத வேண்டும் என்பது தான் என் எண்ணம்.
அன்புடன்
சு. மகாராஜன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக