வியாழன், டிசம்பர் 26, 2013

என் கதை -2

ஒவ்வரு  மனிதனுக்கும் தன் பதினம் வயது நினைவுகள்  என்பது கல்வெட்டு போன்றது , அதிலும் பள்ளி பருவ காலங்கள் இனி எப்போது வரும் என்ற ஏக்கமும் அவவபோது வரும். ஏனெனில் அது அப்படி பட்ட வயது, எதையும் பற்றி எண்ணாமல், தன் மனம் சொல்லும் படி வாழும் வயது, எதையும் எதிர்க்கும் துணிவும் அப்போது தான் வருவதுண்டு , ஜாதி மதம் இனம் பார்க்காமல் ஒரே தட்டில் நண்பர்கள் அனைவரும் உண்டு மகிழும் தருணம் அது , அது தூய்மை கலந்த மனது கொண்ட பருவம்.
எனக்கும் அப்படி ஒரு பட்டாளமுண்டு , நாங்கள் எழுவர் கொண்ட எழுச்சி பட்டாளம் ,( ரஞ்சித், ஸ்ரீதர், கந்தசாமி, ரவிக்குமார், ராம்குமார், செந்தில்குருசாமி, நான் ), வகுப்பறையில் நன்றாக படிக்கும் ஒரு குரூப்ம், படிக்காத மாப்பிள்ளை குரூப் இருப்பது போன்று நடுத்தரம் என்று ஒரு ரகம் உண்டு , பாஸ் மட்டும் ஆனால் போதும் என்று என்னும் ரகம், வரவே இல்லாமல் செலவு செய்து மகிழ்ந்த  நாங்கள் நடுத்தரம். இருந்தாலும் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் உண்டு, அது பத்தாம் வகுப்பு படிக்கும் போது வந்தது,
கணித பாடத்திற்கு நாங்கள் சீறப்பு வகுப்பு போவதுண்டு, அப்போது எங்கள் நேரம்காலை அதற்கு முந்தைய நேரம் பெண்கள் வகுப்புக்கு, அதில் ஒருத்தி எங்கள் எழுவர் மனதிலும் வந்த குடியமர்ந்த குறத்தி, எங்கள் ஒப்பந்தமே அது ன் யார் அவள் வசம் ஆகிறோமோ, மற்றவர்கள் ஒதுங்கி, உதவிடவேண்டும்.

கலை இல்லாத ஓவியமா?
காதல் இல்லாத வாலிபமா?...

 பூர்ணிமா...............

 
கதை தொடரும் (.3).............

 


என்றும் அன்புடன்




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக