ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

பாவி பயலுக



ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் . அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆய்ருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய் எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்


அங்க இருந்த துறவி சொன்னாரு . தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா ? பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு . உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான் . அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம் . ஆனா ஒருத்தரும் எழும்பி என்னனு பார்க்கல . உடனே இவனும் அப்படியே படுத்து தூங்கிட்டான் . மறுநாள் காலைல வண்டிய சரிபண்ணிட்டு போகும் போது. அந்த சத்ததுக்கான காரணத்தை தலைமை துறவிகிட்ட கேட்டான்

உடனே அவரு அத உன்கிட்ட சொல்ல கூடாது. நீ போகலாம் அப்படின்னு சொல்லிட்டார் . இவனும் வந்துட்டான்

அப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழிய வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்க வேண்டி வந்தது . அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது . இவனும் மறு நாள் காரணம் கேட்டான் . ஆனா தலைமை துறவி அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார்

மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான் . அவர் அப்பவும் மறுத்தார் . உடனே இவனுக்கு கோபம் வந்துருச்சு . ஒரு தரவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க . ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு நீயும் என்ன மாதிரி துறவி ஆனா சொல்றேன் அப்படின்னார் .

உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாக வந்துட்டான் . வந்ததும் அவரு இவன தவம் பண்ண சொன்னார் . இவனும் பண்ணினான்

ஆறு மாதம் கடுமையா தவம் இருந்த பிறகு அந்த தலைமை துறவி இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ தொற அங்க தான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் .

உடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு, பக்கத்தில ஒரு சீட்டு அதில ஒரு கேள்வி . அதுக்கு பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்த சாவி தருவேன்னு துறவி சொன்னார் . இவனும் கண்டுபிடிச்சான் அடுத்த சாவியும் தந்தார் . இவன் தொறந்தான் . அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி . ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான்
அங்க தான் இவன் அந்த சத்ததுக்கான காரணத்தை கண்டு புடிச்சான் .

.

.

அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா நீங்க துறவியாகனும்.
( பாவி பயலுக எனக்கும் இப்படிதாங்க அனுப்புனாங்க )



என்றும் அன்புடன்

13 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

Rompa over . . . But reall super jokeRompa over . . . But reall super joke

rajamelaiyur சொன்னது…

Tamilmanam vote potaju

S Maharajan சொன்னது…

வருகைக்கு நன்றி
"என் ராஜபாட்டை"- ராஜா

வேலன். சொன்னது…

மஹாராஜன் சார்....இதுக்குள்ள நீங்க துறவி ஆயிட்டா எப்படி?
வாழ்க வளமுடன்.
வேலன்.

S Maharajan சொன்னது…

நன்றி வேலன் சார்

RAMA RAVI (RAMVI) சொன்னது…

அடப்பாவமே...கதை நன்றாக இருக்கே என்று படித்துக்கொண்டே வந்தால் இப்படி முடிச்சுட்டீங்களே.
நன்றாக இருக்கு.வாழ்த்துக்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் மஹராஜன் -பேசாமல் துறவி ஆயிடலாமா ? - ம்ம்ம்ம் = cheenakay@gmail.com - தங்களீன் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா ? - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

S Maharajan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
S Maharajan சொன்னது…

அன்பின் cheena (சீனா)அவர்களுக்கு
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
என் மினஅஞ்சல் முகவரி
maarasa79@gmail.com

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பாவிப்பயலுக..

எனக்கும் இப்படித்தான் அனுப்பினாங்க..


:))

S Maharajan சொன்னது…

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
முனைவர்.இரா.குணசீலன்

cineikons சொன்னது…

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

Minmalar சொன்னது…

ஆனியே பிடுங்க வேணாம்!

கருத்துரையிடுக