வியாழன், ஜனவரி 28, 2010

ஸ்ரீனிவாச மஹாலும்,எதிர் சந்தும் (ஒரு பக்க கதை)


பாலிடெக்னிக் படிப்பை முடித்து விட்டு ராமனும்,
கண்ணனும் வேலை தேடி கொண்டு இருந்தனர்
அப்பொழுது அவர்களுக்கு ஆபீஸ் இடமாக இடமாக
இருந்தது இந்த கல்யாண மண்டபமே.
இருவரும் காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் அங்கே ஆஜர் ஆகிவிடுவார்கள்.

ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டு போது
மண்டபத்தின் எதிர் சந்து வழியாக ஒரு பெண் வந்தாள்.
ராமன்,கண்ணனிடம் கேட்டான் "யார்லே மாப்புள அது " என்று
பிறகு  கண்ணனிடம் விசாரித்த போது,
அவள் பேட்டை கல்லூரி ஒன்றில் படித்து வருகிறாள் என்றும்
தெரிந்துகொண்டான்.

 தினசரி அவள் வரும் நேரத்தில் ராமன் அங்கே நிற்பான்.
அவளது பார்வை மெதுவாக அவன் மேல் விழுந்தது. வாரங்கள் ஓடியது. ஒரு நாள் இன்று எப்படியும் அவளிடம் தன் என்னத்தை சொல்லிவிடவேன்றும் என்று அவள் பின்னால் சென்று
மெதுவாக அவள் பெயர் சொல்லி அழைத்தான்


அவள் திரும்பி அவனிடன் கேட்டாள்
அண்ணா அவர் வரவில்லையா
அவள் அழைத்த அந்த அவர் "கண்ணன்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக