புதன், ஜனவரி 27, 2010

அதிபராக ராஜபக்சே மீண்டும் தேர்வு



கொழும்பு : இலங்கையின் புதிய அதிபராக ராஜபக்சே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற சரத் பொன்சேகாவை விட 18 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று ராஜபக்சே அபார வெற்றி பெற்றுள்ளார்.


மொத்தம் 22 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். ஆளுங்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கும், எதிர்க் கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் நடக்கும் தேர்தல் என்பதால், சர்வதேச அளவில் இதன் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழர்கள் ஓட்டு தான், அதிபர் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் ஓட்டாக கருதப்பட்டது. தமிழர்கள் பகுதியில் பொன்சேகா அதிக வாக்கு பெற்றும் அவர் தோல்வி அடைந்துள்ளார்.

இனி தமிழனின் வாழ்வு?????????????????????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக