இலங்கையின் கடலோர காவல்படை, தமிழக மீனவர்களை கொன்று குவித்து வருகிறது. இந்திய எல்லைக்குள் மீன் பிடித்தாலும், அதை பொறுக்க முடியாமல், அவர்களை அடித்து விரட்டுவது, சித்ரவதை செய்வது, கொல்வது என, இலங்கை அரசு, தங்கள் அன்றாட நடவடிக்கைளை தொடர்கிறது. காரணம், அனாதையாகிவிட்டான் தமிழன் என்ற ஒரு அதீத நம்பிக்கை. கடிதம் எழுதுவதோடு, தமிழக அரசு நிறுத்திக் கொள்ளும்; எச்சரிக்கை விடுவதோடு மத்திய அரசு முடித்துக் கொள்ளும்.இதை நன்கு உணர்ந்து விட்ட இலங்கை அரசும், இலங்கை கடலோர படையும், தங்கள் அஸ்திரங்களை செலுத்திக் கொண்டிருக்கின்றன. வல்லரசு நாடாக உருவாகிவரும் இந்திய அரசுக்கு, இதை தட்டி கேட்க கூட திராணியில்லை. சொந்த மண்ணில் தமிழர்கள் செத்து மடிவதை ரசித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு, கேட்க தைரியமில்லை.
இனியும் இது போல் நடைபெறாமல் இருக்க ஏதோ
ஒருவகையில் நம் ஆதரவை அவர்களுக்கு வழங்குவோம்
நம் போடும் சத்தம் சென்றடைய http://www.savetnfisherman.org/
தளத்தில் நம் ஆதரவை தெரிவிப்போம்
இணைய தள முகவரி : http://savetnfisherman.org/
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman ,
http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப http://www.petitiononline.com/TNfisher/petition-sign.html?
நண்பர் வைகை அவர்களின் "'உண்மை சுடும்"" கடிதம்
உங்கள் பார்வைக்கு
http://unmai-sudum.blogspot.com/2011/01/blog-post_29.html
நன்றி பாரத்... பாரதி...(http://bharathbharathi.blogspot.com/)
என்றும் அன்புடன்